விடுதலைபுரம் (காப்பியம்)
தமிழிசைப் பாவாணர் பேராசிரியர் அறிவரசன்
காணிக்கை
'நீணில மக்க ளெல்லாம்
ஒருநிகர் பிறப்பால்' என்னும்
மாணுயர் கொள்கை தன்னை
மாசிலா அறமாய் ஏற்றுப்
பேணுநர் பலர்க்கும் இந்தப்
பிழையிலாக் காப்பி யத்தைக்
காணிக்கை யாக்கி உள்ளக்
களிப்பினில் திளைப்பேன் மாதோ"
..........தொடரும்
Saturday, March 27, 2010
விடுதலைபுரம் எனும் தலைப்பில் நான் எழுதிய காப்பியத்தை தினம் ஒரு இயலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தவறாது படித்து உங்கள் கருத்துகளை கூற விழைகிறேன்.
நன்றியுடன்
தமிழிசைப் பாவாணர்
பேராசிரியர் அறிவரசன்
நன்றியுடன்
தமிழிசைப் பாவாணர்
பேராசிரியர் அறிவரசன்
Friday, March 26, 2010
கூட்டமைப்பாகச் செயற்படுவோம்.
"தெள்ளு தமிழைக் காப்பதற்கும்
தேசிய உரிமை மீட்பதற்கும்
நல்ல ஈழ விடுதலைக்கு
நற்றுணை யாக நிற்பதற்கும்
வெள்ளம் போலத் தமிழரெல்லாம்
வேறு பாட்டை மறந்துவிட்டுக்
கொள்கை வழியில் கைகோர்த்துக்
கூட்டமைப்பாகச் செயற்படுவோம்!!!
விரிந்து பிரிந்து வேறுபட்டு
விலகி நின்றால் குறி இலக்கை
நெருங்கி வெல்ல முடியாது
நேரிய கொள்கை அடிப்படையில்
ஒருங்கிணைந்து தமிழரெல்லாம்
ஓரணியாகச் செயற்பட்டால்
பொருந்தும் வெற்றி நமக்காகும்
புகழும் நமக்கே ஆகுமையா!!!"
தேசிய உரிமை மீட்பதற்கும்
நல்ல ஈழ விடுதலைக்கு
நற்றுணை யாக நிற்பதற்கும்
வெள்ளம் போலத் தமிழரெல்லாம்
வேறு பாட்டை மறந்துவிட்டுக்
கொள்கை வழியில் கைகோர்த்துக்
கூட்டமைப்பாகச் செயற்படுவோம்!!!
விரிந்து பிரிந்து வேறுபட்டு
விலகி நின்றால் குறி இலக்கை
நெருங்கி வெல்ல முடியாது
நேரிய கொள்கை அடிப்படையில்
ஒருங்கிணைந்து தமிழரெல்லாம்
ஓரணியாகச் செயற்பட்டால்
பொருந்தும் வெற்றி நமக்காகும்
புகழும் நமக்கே ஆகுமையா!!!"
வேண்டுகோள்
வளர்க தமிழ்உணர்வு வெல்க தமிழ்த்தேசியம்
பேராசிரியர் அறிவரசன் தமிழ் உணர்வாளர்கள் - ஒருங்கிணைப்புக்குழு
இன உணர்வுள்ள தமிழ் உறவுகளுக்கு, வணக்கம். 'தமிழ்த் தேசியம்' என்னும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ் உணர்வாளர்களையும் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்னும் உயரிய குறிக்கோளுடனும் அந்த குறிக்கோள் நிறைவேற நீங்கள் துணை நிற்க வேண்டும் என்னும் கோரிக்கையுடனும் இந்த மடல் உங்களிடம் சேர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் ஈடுபாடுள்ள கட்சிகள், இந்திய நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றத்திலும் எந்த வழியிலாவது இடங்களைப் பெற முயல்கின்றன. வாய்ப்பு நேர்ந்தால் மாநிலத்தின் ஆட்சி பீடத்தில் அமரத் துடிக்கின்றன. தில்லியில் அமைக்கப்படும் கூட்டணி அரசு எதுவாயினும் அதில் பங்கேற்று அமைச்சரவையில் இடம்பெறப் போராடுகின்றன. சுருங்கச் சொன்னால் ஆட்சி அதிகாரப் பதவிகளைப் பெறுவது ஒன்றையே கொள்கையாக்க் கொண்டுள்ளன. இத்தகைய கட்சிகள் தமிழின உரிமைகளை வென்றெடுக்க, என்றும் துணைநிற்க மாட்டா எனபது தெளிவு.
தமிழ்த்தேசிய அமைப்பு எனத் தம்மைக் காட்டிக் கொள்கிற சில கட்சிகள், நேரடியாகத் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், தமிழின உணர்வாளர்களை அடக்கி, ஒடுக்க முனைகின்ற அரசியல் கட்சிகளுக்குச் சார்பாகத் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடத் தயங்குவதில்லை. இத்தகைய அமைப்புகளையும் தமிழ் உணர்வாளர்கள் நம்பியிருக்க முடியாது.
தமிழ்த் தேசியத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்ற அமைப்புகள், தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படையாகக் காட்டுகின்றன. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கின்றன. தமிழ்த்தேச விடுதலை, தமிழீழ விடுதலை என்னும் கொள்கைகளில் அவை தமக்குள் ஒத்துப் போகின்றன.
பல வகையிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய அமைப்புகள், 'தமிழின விடுதலை' என்னும் ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில் ஒரு கூட்டமைப்பாகச் செயற்பட வேண்டும். ஒவ்வொரு தமிழ்த் அமைப்பும் வெவ்வேறு காலங்களில் வேறு வேறு இடங்களில் உரிமைக்குரல் கொடுக்கும் போது, ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருப்போர், அந்தக் குரலைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கின்றனர்.
தமிழ்த் தேசிய அமைப்பகள், ஒத்த கொள்கையில் கூட, ஒருங்கிணைந்து கூட்டாகச் செயற்படாமல் தனித்தனியே நிற்பதை இன உணர்வுடைய தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகள், ஒரு பொதுக்கொள்கையின் அடிப்படையில் கூட்டமைப்பு ஒன்றை இதுவரை அமைத்துக்கொள்ளாமல் இருப்பது குறித்து, இன உணர்வாளர்கள் கவலைப்படுகின்றனர். அத்தகைய கூட்டமைப்பு உடனே உருவாக்கப்பட வேண்டும் என்னும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 22 தமிழர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் வெவ்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், 'தமிழீழ விடுதலை' என்னும் ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் செயற்பட்டதை நாம் அறிவோம்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளும் 'தமிழர் வாழ்வுரிமைக்காகப் போராடுதல்' என்னும் ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில் ஒரு கூட்டமைப்பாகச் செயற்படமுடியும். அவ்வாறு செயற்பட்டால், அந்தக் கூட்டமைப்பின் வலுவைக் கண்டு, அமைப்புச் சாராமல் தமிழ்நாடெங்கணும் பரவலாக ச் சிதறிக் கிடக்கின்ற தமிழ் உணர்வாளர் அனைவரும் அந்தக் கூட்டமைப்புடன் தங்களை இணைத்துக் கொண்டு கூட்டமைப்பின் வலிமைக்கு மேலும் வலிமை சேர்ப்பார்கள். வலிமை நிறைந்த கூட்டமைப்பின் குரலுக்கு ஆட்சியாளர்கள் வளைந்து கொடுப்பார்கள்.
1983-ஆம் ஆண்டு, இலங்கைச் சிங்களர், ஈழத் தமிழர்க்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டதை அறிந்து மனம் கலங்கிய தமிழ்நாட்டு மக்கள், கட்சி எல்லைகளைக் கடந்து கிளர்ந்தெழுந்தனர். ஈழத் தமிழர்க்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித்தனியே பிரிந்து நின்றதால், அன்றைய எழுச்சி காலப் போக்கில் அடங்கிவிட்டது.
சீனா, பாகித்தான் முதலிய நாடுகள் வழங்கிய படைக் கருவிகளுடனும் இந்தியாவின் முழுமையான ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் இலங்கைச் சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை முற்றாக அழித்து விட வேண்டும் எனும் இலக்குடன் நான்காம் ஈழப்போரை நடத்தியது. 2009-ஆம் ஆண்டு கிளிநொச்சியுள் நுழைந்த சிங்களப் படையினர், தொடர்ந்து தமிழீழத்தின் பல நகரங்களை வல்வளைப்புச் செய்தனர். உலக அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளைஏயும், நச்சுக் குண்டுகளையும் வீசித் தமிழ் உறவுகளைக் கொன்றுகுவித்ததை அறிந்தபோது பதறினோம். ஈழத் தமிழ் உறவுகளைக் காக்க வேண்டும், அதற்கான முயற்சிகளில் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்ட்மென விரும்பினோம். அந்த நிலையிலும் தலைவர்கள் தனித்தனியே நின்றனர். கூட்டாகச் செயற்படாமையால், தமிழர்களை ஏமாற்றிய தமிழ்நாடு அரசுக்கோ, சிங்களப் பேரினவாத அரசுக்குத் துணையாக நின்ற இந்திய அரசுக்கோ வலுவாக அழுத்தம் கொடுக்க முடியவில்லை.
ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டாலும் அண்டை மாநில அரசுகளால் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற வலுவுள்ள ஒரு தமிழ்த்தேசக் கூட்டமைப்புத் தேவை. தனித்தனியே நின்று தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன்?
தமிழின உணர்வுடன் நெஞ்சம் கன்ன்று நின்று கொண்டு இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் தவிப்பைப் போக்க வேண்டும். அதற்குத் தமிழ்த் தேசக் கூட்டமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
இனநலத்தை முன்னிறுத்திப் பிறநலங்களைப் பின்னுக்குத் தள்ளித் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள், தமிழ்த்தேசக் கூட்டமைப்பை உடனே கட்டமைக்க வேண்டும். தமிழ் உணர்வாளர்களின் தணியாத வேட்கை இதுதான்.
பதவியில் அமர்வதையும் பணம் சுருட்டுவதையுமே கொள்கையாகக் கொண்டு தமிழர் உரிமைகளைக் காக்கத் தவறிய கட்சிகளைப் புறந்தள்ள வேண்டும். விரைவில் வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ் உணர்வுடன் செயற்படும் கட்சிகளின் புதியகூட்டணியை உருவாக்க வேண்டும். இந்தச் சீரிய பணியை நிறைவேற்றுவதற்காகவும் தமிழ்த் தேசக் கூட்டமைப்புத் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.
தமிழின உணர்வாளர்களே!!! தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்களுக்கு உங்கள் வேட்கையை வெளிப்படுத்துங்கள்.
தமிழ் உணர்வுடன் உங்கள்
அறிவரசன்
குறிப்பு ; தமிழ்தேசக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காகவே 'தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைப்புக்குமு' அமைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு உருவானதும் இந்தக் குழு, அக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும்.
பேராசிரியர் அறிவரசன் தமிழ் உணர்வாளர்கள் - ஒருங்கிணைப்புக்குழு
இன உணர்வுள்ள தமிழ் உறவுகளுக்கு, வணக்கம். 'தமிழ்த் தேசியம்' என்னும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ் உணர்வாளர்களையும் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்னும் உயரிய குறிக்கோளுடனும் அந்த குறிக்கோள் நிறைவேற நீங்கள் துணை நிற்க வேண்டும் என்னும் கோரிக்கையுடனும் இந்த மடல் உங்களிடம் சேர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் ஈடுபாடுள்ள கட்சிகள், இந்திய நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றத்திலும் எந்த வழியிலாவது இடங்களைப் பெற முயல்கின்றன. வாய்ப்பு நேர்ந்தால் மாநிலத்தின் ஆட்சி பீடத்தில் அமரத் துடிக்கின்றன. தில்லியில் அமைக்கப்படும் கூட்டணி அரசு எதுவாயினும் அதில் பங்கேற்று அமைச்சரவையில் இடம்பெறப் போராடுகின்றன. சுருங்கச் சொன்னால் ஆட்சி அதிகாரப் பதவிகளைப் பெறுவது ஒன்றையே கொள்கையாக்க் கொண்டுள்ளன. இத்தகைய கட்சிகள் தமிழின உரிமைகளை வென்றெடுக்க, என்றும் துணைநிற்க மாட்டா எனபது தெளிவு.
தமிழ்த்தேசிய அமைப்பு எனத் தம்மைக் காட்டிக் கொள்கிற சில கட்சிகள், நேரடியாகத் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், தமிழின உணர்வாளர்களை அடக்கி, ஒடுக்க முனைகின்ற அரசியல் கட்சிகளுக்குச் சார்பாகத் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடத் தயங்குவதில்லை. இத்தகைய அமைப்புகளையும் தமிழ் உணர்வாளர்கள் நம்பியிருக்க முடியாது.
தமிழ்த் தேசியத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்ற அமைப்புகள், தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படையாகக் காட்டுகின்றன. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கின்றன. தமிழ்த்தேச விடுதலை, தமிழீழ விடுதலை என்னும் கொள்கைகளில் அவை தமக்குள் ஒத்துப் போகின்றன.
பல வகையிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய அமைப்புகள், 'தமிழின விடுதலை' என்னும் ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில் ஒரு கூட்டமைப்பாகச் செயற்பட வேண்டும். ஒவ்வொரு தமிழ்த் அமைப்பும் வெவ்வேறு காலங்களில் வேறு வேறு இடங்களில் உரிமைக்குரல் கொடுக்கும் போது, ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருப்போர், அந்தக் குரலைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கின்றனர்.
தமிழ்த் தேசிய அமைப்பகள், ஒத்த கொள்கையில் கூட, ஒருங்கிணைந்து கூட்டாகச் செயற்படாமல் தனித்தனியே நிற்பதை இன உணர்வுடைய தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகள், ஒரு பொதுக்கொள்கையின் அடிப்படையில் கூட்டமைப்பு ஒன்றை இதுவரை அமைத்துக்கொள்ளாமல் இருப்பது குறித்து, இன உணர்வாளர்கள் கவலைப்படுகின்றனர். அத்தகைய கூட்டமைப்பு உடனே உருவாக்கப்பட வேண்டும் என்னும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 22 தமிழர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் வெவ்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், 'தமிழீழ விடுதலை' என்னும் ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் செயற்பட்டதை நாம் அறிவோம்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளும் 'தமிழர் வாழ்வுரிமைக்காகப் போராடுதல்' என்னும் ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில் ஒரு கூட்டமைப்பாகச் செயற்படமுடியும். அவ்வாறு செயற்பட்டால், அந்தக் கூட்டமைப்பின் வலுவைக் கண்டு, அமைப்புச் சாராமல் தமிழ்நாடெங்கணும் பரவலாக ச் சிதறிக் கிடக்கின்ற தமிழ் உணர்வாளர் அனைவரும் அந்தக் கூட்டமைப்புடன் தங்களை இணைத்துக் கொண்டு கூட்டமைப்பின் வலிமைக்கு மேலும் வலிமை சேர்ப்பார்கள். வலிமை நிறைந்த கூட்டமைப்பின் குரலுக்கு ஆட்சியாளர்கள் வளைந்து கொடுப்பார்கள்.
1983-ஆம் ஆண்டு, இலங்கைச் சிங்களர், ஈழத் தமிழர்க்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டதை அறிந்து மனம் கலங்கிய தமிழ்நாட்டு மக்கள், கட்சி எல்லைகளைக் கடந்து கிளர்ந்தெழுந்தனர். ஈழத் தமிழர்க்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித்தனியே பிரிந்து நின்றதால், அன்றைய எழுச்சி காலப் போக்கில் அடங்கிவிட்டது.
சீனா, பாகித்தான் முதலிய நாடுகள் வழங்கிய படைக் கருவிகளுடனும் இந்தியாவின் முழுமையான ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் இலங்கைச் சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை முற்றாக அழித்து விட வேண்டும் எனும் இலக்குடன் நான்காம் ஈழப்போரை நடத்தியது. 2009-ஆம் ஆண்டு கிளிநொச்சியுள் நுழைந்த சிங்களப் படையினர், தொடர்ந்து தமிழீழத்தின் பல நகரங்களை வல்வளைப்புச் செய்தனர். உலக அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளைஏயும், நச்சுக் குண்டுகளையும் வீசித் தமிழ் உறவுகளைக் கொன்றுகுவித்ததை அறிந்தபோது பதறினோம். ஈழத் தமிழ் உறவுகளைக் காக்க வேண்டும், அதற்கான முயற்சிகளில் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்ட்மென விரும்பினோம். அந்த நிலையிலும் தலைவர்கள் தனித்தனியே நின்றனர். கூட்டாகச் செயற்படாமையால், தமிழர்களை ஏமாற்றிய தமிழ்நாடு அரசுக்கோ, சிங்களப் பேரினவாத அரசுக்குத் துணையாக நின்ற இந்திய அரசுக்கோ வலுவாக அழுத்தம் கொடுக்க முடியவில்லை.
ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டாலும் அண்டை மாநில அரசுகளால் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற வலுவுள்ள ஒரு தமிழ்த்தேசக் கூட்டமைப்புத் தேவை. தனித்தனியே நின்று தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன்?
தமிழின உணர்வுடன் நெஞ்சம் கன்ன்று நின்று கொண்டு இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் தவிப்பைப் போக்க வேண்டும். அதற்குத் தமிழ்த் தேசக் கூட்டமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
இனநலத்தை முன்னிறுத்திப் பிறநலங்களைப் பின்னுக்குத் தள்ளித் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள், தமிழ்த்தேசக் கூட்டமைப்பை உடனே கட்டமைக்க வேண்டும். தமிழ் உணர்வாளர்களின் தணியாத வேட்கை இதுதான்.
பதவியில் அமர்வதையும் பணம் சுருட்டுவதையுமே கொள்கையாகக் கொண்டு தமிழர் உரிமைகளைக் காக்கத் தவறிய கட்சிகளைப் புறந்தள்ள வேண்டும். விரைவில் வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ் உணர்வுடன் செயற்படும் கட்சிகளின் புதியகூட்டணியை உருவாக்க வேண்டும். இந்தச் சீரிய பணியை நிறைவேற்றுவதற்காகவும் தமிழ்த் தேசக் கூட்டமைப்புத் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.
தமிழின உணர்வாளர்களே!!! தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்களுக்கு உங்கள் வேட்கையை வெளிப்படுத்துங்கள்.
தமிழ் உணர்வுடன் உங்கள்
அறிவரசன்
குறிப்பு ; தமிழ்தேசக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காகவே 'தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைப்புக்குமு' அமைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு உருவானதும் இந்தக் குழு, அக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும்.
Thursday, March 25, 2010
பிரபாகரன்,மதிவதனி,இசைப்ரியா - நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்
சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமிலிருந்த புலிகளின் பெண் போராளியும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியாவை, ராணுவத்தினர் கடத்திக் கொண்டுபோய் கொடூரமாகப் படுகொலை செய்திருப்பதை 'அய்யோ....தங்கச்சி! கதறும் ஈழ அண்ணன்' என்கிற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.
இந்த செய்தி, தமிழகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நக்கீரனை தொடர்பு கொண்டு நிறைய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர் புலம்பெயர்ந்த தமிழர்கள். இந்த சூழலில், நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் கிளிநொச்சியில் இரண்டு வருடம் தமிழ்ப்பணி செய்தவர். இசைப்பிரியாவையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார் என்கிற தகவல்களை பகிர்ந்து கொண்டனர் ஈழ ஆதரவாளர்கள்.
பேராசிரியர் அறிவரசனை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாக பணிபுரிந்து 1996-ல் ஓய்வு பெற்றுவிட்டேன். தமிழ்ப் பணி மட்டுமே என் மூச்சு!!!
என்னுடைய தமிழ்ப்பணி பற்றி போராளிகள் அறிந்திருந்தனர். 2006-ல் அவர்களிடமிருந்து தமிழீழத்தில் தமிழ்ப்பணி செய்ய இயலுமா? விருப்பம் இருப்பின் இங்கு வர இயலுமா? என்று எனக்கு அழைப்பு வந்தது. அப்போது யத்த நிறுத்தம் அமலில் இருந்த காலகட்டம்.
அவர்களின் அழைப்பை ஏற்று முறைப்படி விசா பெற்று 2006 மார்ச்சில் கிளிநொச்சிக்குச் சென்றேன். தமிழீழத்தின் கல்வித்துறை பொறுப்பாளர்கள்,'அய்யா, இங்குள்ள தமிழாசிரியர்களை தகுதியுள்ளவர்களாக உருவாக்க வேண்டும். அப்படி தமிழாசிரியர்களாக உருவாக்க நாற்பது பேரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்களுக்கு பயிற்சியளித்து, தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்க வேண்டும்' என்றனர்.
மேலும், 'இதற்கான பாடத்திட்டங்களையும்நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பணி முடிய எத்தனை நாட்கள் ஆகும்?' என்றனர். நான், 'இரண்டு ஆண்டுகள் ஆகும்' என்றேன்.
உடனே அவர்கள் 'இரண்டு ஆண்டுகள் பணி செய்ய இயலுமா அய்யா என்று கேட்க, 'எனக்கு முழு சம்மதம்' என்று கூறி ஒப்புக்கொண்டேன்.
எனக்கான அனைத்து வசதிகளையும் பொறுப்பாளர்கள் பார்த்துக் கொண்டனர். அங்கு பணி செய்த இரண்டாண்டுகளும் எந்த குறையும் எனக்கில்லை.
நாற்பது பேருக்கும் தமிழ் பயிற்சி கொடுத்து ஆசிரியர்களாக உருவாக்கினேன். நாற்பது பேருமே தேர்ச்சி பெற்றனர். சங்க்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் ஆரம்பித்து அனைத்து இலக்கண பயிற்சியும் அவர்களுக்குத் தரப்பட்டது. தவிர... பிறமொழி கலப்பில்லாமல் பேசும் பயிற்சி, எழுதும் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தனர்.
இந்த்த் தமிழ்ப் பணிக்காகத்தான் நான் அழைக்கப் பட்டிருந்தேன். இந்த பணிக் காலத்தில் ஒருநாள், தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் எட்டு மாணவிகளும் பயிற்சிக் கூடத்திற்கு வந்தனர். 'சில பயிற்சிகளை கற்றுக் கொள்ள விரும்கிறோம் அய்யா' என்றனர்.
அந்த வகையில் தமிழின் அடிப்படை இலக்கணம் குறித்து எட்டு மாதங்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டனர் அவர்கள். தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் மதிவதனி. எந்த ஒரு பயிற்சியை கொடுத்தாலும் மற்ற மாணவிகளை விட முதலாவதாக பயிற்சியை முடித்து 'சரியாகச் செய்திருக்கிறேனா அய்யா' என்று ஆர்வமாக வந்து குறிப்பேடுகளை காட்டுவார் மதிவதனி. உலகத் தமிழர்கள் போற்றும் ஒரு மாமனிதரின் மனைவிக்கு தமிழ்ப் பயிற்சி கொடுத்தேன் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு.
மாலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே புலிகளின் 'தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல் மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன்.
துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் , தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
அதனால் அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது இசைப்பிரியாவை சந்தித்தேன்.
அப்போது அவரிடம், "இசை சரி... பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே..." என்றேன். அதற்கு அவர், 'இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர், ஆனால் இசைப்பிரியா.. இசைப்பிரியா.. என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்த்தால், அதுவே நிலைத்துவிட்டது' என்றார்.
இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர், ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக்காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ்ப் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
துடிப்பான அந்த இளம்பெண் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன் என்றார் அறிவரசன்.
அவரிடம், பிரபாகரனை சந்தித்தீர்களா? என்று கேட்டபோது "தமிழ்ப்பணிக்காக கிளிநொச்சியில் இருந்த இரண்டு வருட காலத்தில் இரு முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்த்து. பணியை துவக்கிய காலகட்டத்தில் முதன்முறையாக தலைவரை நான் சந்தித்தபோது மிகுந்த கம்பீரமாகவும் இயல்பாகவும் இருந்தார்.
என்னிடம் 'உங்களுக்கான வசதிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா அய்யா ஏதேனும் வசதி குறைவாக இருந்தாலோ பிரச்சனைகள் இருந்தாலோ தாராளமாக என்னிடம் சொல்லுங்கள்' என்றார் மன நிறைவாக இருக்கிறது என்று கூறினேன்.
நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதால் மொழியைப் பற்றி மட்டுமே என்னிடம் பேசினார். மொழியின் வளர்ச்சி குறித்தும், மொழியைப் பாதுகாப்பது குறித்தும் பேசிய பிரபாகரன், யுனொஸ்கோ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் 50 ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்த்துள்ளனர்.
எதனை கண்டு அழியும் மொழியில் தமிழைச் சேர்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து பார்த்திருப்பார்களாயின் அப்படி கூறியிருக்கமாட்டார்கள். தமிழீழம் கிடைத்துவிட்டால், தமிழை பாதுக்காகவும் வளர்ச்சிக்காகவும் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். தமிழை அழிய விட மாட்டோம்' என்றார். மொழி மீது அவருக்கிருந்த பற்று புரிந்த்து.
இப்படிச் சொன்னவர் சட்டென்று, 'என் பெயர் தமிழ்தானே அய்யா? என்றார். நான் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டாரோ என்னவோ? 'எனக்கு கரிகாலன்னு ஒரு பெயர் உண்டு. கரிகாலன் தமிழ்ப் பெயர்தானே?' என்றார். உடனே நான் , 'மிக அழகான சரியான தமிழ்ப் பெயர்' என்றேன். மகிந்து சிரித்தார். 'உங்களின் தமிழ்ப் பணி எங்களை நெகிழ வைக்கிறது' என்று கூறி அனுப்பி வைத்தார் பிரபாகரன்.
இதற்கு பிறகு, 2008 மார்ச்சில் என் பணியை நிறைவு செய்துவிட்டு கிளிநொச்சியிலிருந்து தமிழகத்திற்கு புறப்பட வேண்டிய நாளில், விடைப்பெற்றுச் செல்வதற்காக அவரை சந்தித்தேன் சிங்கள அரசு யுத்தத்தை துவக்கியிருந்த நேரம் அது.
அந்த கூழலிலும் முகம் மலர்ந்து பேசிய அவர், 'அய்யா வந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன?' என்றார். 'சரியாக இரண்டு வருடம்' என்றேன். 'அப்பா.. இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டனவா?' என்று ஆச்சிரியப்பட்டார்.
'தமிழீழம் மலர்ந்தபின் நீங்களெல்லாம் இங்கு வந்து தம்ழ்ப்பணி செய்ய வேண்டும் அய்யா' என்று கூறி வழி அனுப்பி வைத்தார்.
கிளிநொச்சியில் இரண்டு வருடம் தமிழ்ப்பணி செய்த்தை நான் பாக்கியமாக கருதுகிறேன். அந்த இரண்டு வருடங்கள்தான் என் தமிழ்ப்பணியில் மறக்க முடியாத நாட்கள். அங்குதான் தமிழ் வாழ்கிறது" என்றார் பேராசிரியர் அறிவரசன்.
(2010 சனவரி 06 நக்கீரன் இதழில் வந்த எனது செவ்வி)
நன்றி நக்கீரன்
Subscribe to:
Comments (Atom)